தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, பிப்ரவரி 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பம் செய்துள்ள நேரடி தனித்தேர்வர்கள், ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி தேர்ச்சியுறாத தனித்தேர்வர்கள் ஆகியோர் தவறாமல் கலந்துகொண்டு செய்முறைத் தேர்வெழுத வேண்டும். மேலும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டை பிப்.25ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனை மதிப்பெண்களுக்கு எத்தனை கேள்வி!