ETV Bharat / state

தொடர் விடுமுறை எதிரொலி: தாறுமாறாக ஏறிய ஆம்னி பேருந்து கட்டணம்...

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 6:01 PM IST

continuation-holiday-omni-bus-fare-extremely-hike
ஆம்னி பேருந்து கட்டண உயர்வு

Private omni bus fare hike: தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை காரணமாகத் தனியார் பேருந்து டிக்கெட் கட்டணங்கள் 80 சதவீதம் வரை அதிகரித்து வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை: மிலாடி நபி, காந்தி ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்கள் என 4 நாள்கள் தொடர் விடுமுறை நாளையுடன் முடிவடையும் நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் 3 முதல் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளதாகப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னையில் வேலை செய்யும் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்கள் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். இன்றுடன் (அக்.2) விடுமுறை முடிவதால், பலரும் சென்னை திரும்ப உள்ளனர். இதனால், பிற மாவட்டங்களிலிருந்து, சென்னைக்கும் வரும் தனியார் பேருந்துகள் கட்டணம் 50 சதவிதம் முதல் 80 சதவீதம் வரை உயர்ந்து உள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் இன்று (அக்.2) மீண்டும் சென்னைக்குத் திரும்ப உள்ளனர். ஏராளமான மக்கள் வெளியூர்களுக்குச் சென்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் சென்னைக்குத் திரும்புவதற்குத் தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததையும், பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன என்று பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதன்படி, கன்னியாகுமரி-சென்னை பேருந்து ரூ.4000 வரையும், தேனி-சென்னை ரூ.3000, நெல்லை-சென்னை ரூ.3000, மதுரை-சென்னை 2700 முதல் 3000 வரையும், கோவை-சென்னை 2000 முதல் 3500 வரை என வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட 80சதவீதம் அதிகமாக உள்ளது என்று பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து பயணிகள் கூறுவது, "ஆம்னி பேருந்துகளின் விலை எப்போதும் இதைப்போல் உயர்த்தி வருகிறார்கள். ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தினங்களில் எப்போதும், 30 சதவீதம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது தொடர் விடுமுறை தினம் என்பதால் மனசாட்சி இன்றி பன்மடங்கு கட்டணத்தை ஏற்றி உள்ளனர்.

விடுமுறை தினத்தில் குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இவர்களின் விலை ஏற்றம், சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலைமையை ஏற்படுத்திவிடுகிறது. இது போன்ற விடுமுறை தினத்தைப் பயன்படுத்தி பயணிகளிடம் பணத்தை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பறிக்கும் நிலை தான் இருக்கிறது என்று தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு சிறப்புப் பேருந்து விடுகின்றனர். ஆனால், அந்த பேருந்து போதுமானதாக இருப்பது இல்லை, எனவே, தமிழ்நாடு அரசு போதுமான சிறப்புப் பேருந்துகள் இயக்க வேண்டும் இல்லையேல், தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு என்று நிலையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இளநீரில் விளக்கு எரியும் அதிசயம்! நூரொந்து சாமியின் மர்மம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.