ETV Bharat / state

விரட்டிப் பிடித்த காவல்துறை - சிக்கிக் கொண்ட 400

author img

By

Published : Aug 21, 2020, 1:42 AM IST

Police arrest cell phone thieves in Chennai
Police arrest cell phone thieves in Chennai

சென்னை: கொலை முயற்சி, இருசக்கர வாகனம் திருடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட பூந்தமல்லியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை அண்ணா நகர் பகுதியில் சாலையோரமாக, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் வந்தன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வரும் நிலையில், செல்போன் பறிப்பு சம்பவங்கள் தலைதூக்க தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அண்ணாநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி செல்போன் சிக்னலை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் விக்னேஷ் என்கிற கொள்ளையனை நெற்குன்றம் பகுதியில் செல்போன் சிக்னலை வைத்து பிடிக்க ஆய்வாளர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் விரைந்தனர். அங்கு கொள்ளையன் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டு விரட்டி பிடித்தனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணன், விக்னேஷை விரட்டி பிடிக்க முயன்ற போது இருவருக்கும் அடிபட்டது.

இதனையடுத்து இருவருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை செய்ததில், கொள்ளையன் பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இவன் மீது செஞ்சியில் கொலைமுயற்சி வழக்குகள் உள்ளன. கொள்ளையன் விக்னேஷ் பத்தாம் வகுப்பில் 400 மதிப்பெண் பெற்றதால், எல்லோரும் 400 என அடைமொழியுடன் அழைத்துள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் எடுத்த விக்னேஷ், பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு வரை படித்து வந்துள்ளான். நண்பனுக்காக கொலை முயற்சி வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில் கல்லூரி நிர்வாகம் விக்னேஷை நீக்கியது.

முழு நேர குற்றவாளியாக மாறிய விக்னேஷ் செல்போன், இருசக்கர வாகனம் திருடுவது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட ஆரம்பித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.