ETV Bharat / state

இரண்டாம் உலக போருக்கு பின் ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க அதிபர்.. பேசுபொருளாகும் ஜோ பைடன் - ஸ்டாலின் சந்திப்பு புகைப்படம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 11:29 AM IST

Updated : Sep 13, 2023, 1:41 PM IST

பேசு பொருள் ஆகிவரும் ஜோ பைடன் - ஸ்டாலின் கைகுலுக்கும் புகைப்படம்
பேசு பொருள் ஆகிவரும் ஜோ பைடன் - ஸ்டாலின் கைகுலுக்கும் புகைப்படம்

Joe Biden - Stalin: ஜி20 உச்சி மாநாட்டில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைகுலுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி பல்வேறு கேள்விகள், விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

சென்னை: பாரத், சனாதனம் என பல்வேறு தலைப்புகள் தற்போது பேசு பொருளாக இருந்தாலும், தமிழகத்தில், ஜி20 உச்சி மாநாட்டின் போது ஜோ பைடன் - ஸ்டாலின் சந்திப்பு பல்வேறு தரப்பினரிடையே சூடுபிடிக்கும் பேசு பொருளாக இருந்து வருகிறது. அண்மையில் நடந்த ஜி20 உச்சி மாநாடு விமர்சையாக பல விமர்சனங்களுடன் நடைபெற்று முடிந்தது.

இந்த ஜி20 உச்சி மாநாடு தொடங்கிய நாள் முதலே பாரத் பிரச்சினையும் தொடங்கிவிட்டது. இந்த உச்சி மாநாட்டிற்கு, உலகம் முழுவது இருக்கும் முக்கிய தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். இதனால் டெல்லி நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்தது. மேலும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட தலைவா்களுக்கு குடியரசுத் தலைவா் சனிக்கிழமை (செப்.09) இரவு பாரத் மண்டபத்தில் விருந்து அளித்தாா்.

இந்த விருந்தில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. சமூக வலைதளத்தில், ஜி20 உச்சி நாட்டின் மாநாடு புகைப்படங்கள் வைரலானது.

அதில், பிரதமர் முன் இருந்த பாரத் பலகை முதல், அமெரிக்க ஒன்றியத்தின் அதிபரான ஜோ பைடனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த புகைப்படம் வரை அனைத்தும் பேசு பொருளானது. மேலும் ஜி20 மாநாட்டின் போது பாரத் மண்டபத்தில், மழைநீர் தேங்கிய படங்கள் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக (Memes) உருவெடுத்தன.

அதில் இங்காலந்து பிரதமர் ரிஷி சுனக் அவரது மனைவியை மழையில் நனையாத வண்ணம் குடைபிடித்தப்படி வலம் வந்த புகைப்படம் பல லட்சக்கணக்கான லைக்குகளை குவித்தது. ஆனால் தமிழகத்தில் தற்போது புகைப்பட செய்தியாளர்களிடையே (PHOTO JOURNALISTS) ஒரு குழப்பம் நிலவி வருகிறது. அதுதான், ஜோ பைடன் - மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை எடுத்தது யார் என்ற குழப்பம்.

தற்போது அதிக அளவில் இவர்களிடைய பேசப்பட்டு வருவதும் இந்த தலைப்பு தான். அதாவது, ஜி20 உச்சி மாநாட்டில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்ள, அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்களைச் சோ்ந்த பெரும்பான்மையான முதலமைச்சர்கள் கலந்து கொள்ளாத நிலையில், தென் மாநிலங்களைச் சோ்ந்த முதலமைச்சர்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டாா்.

மேலும், விருந்து நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட முதலமைச்சர்கள் நேரடியாக பாரத் மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்திற்கு முதலில் வரவழைக்கப்பட்டு, பின்னா் அங்கிருந்து தனி வாகனம் மூலம் பாரத் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனா். அதேபோல், மாநில முதலமைச்சர்களுடன் செல்ல அவர்களின் புகைப்பட கலைஞர்களுக்கும் (Photographers), வீடியோ கிராஃபர்களுக்கும் (Videographers) அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

மேலும், பிரதமரின் புகைப்பட கலைஞர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததாக நம்பதக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஜோ பைடன் - ஸ்டாலின் சந்திப்பு புகைப்படம் திடீரென்று ட்விட்டரில் (Twitter) ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், அந்த புகைப்படத்தை எடுத்தது யாராக இருக்கும் என்ற கேள்விக்கு பல அனுமான பதில்கள் தற்போது உலா வருகின்றன.

அதில் ஒன்று தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு சென்று இருந்தது. அதனால், அந்த புகைப்படத்தை அவர் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். அதேபோல், அந்த புகைப்படத்தை பிரதமரின் புகைப்பட கலைஞர் எடுத்து முதலமைச்சருக்கு அனுப்பி இருக்கலாம் என மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த புகைப்படத்தை எடுத்தது யார் என்பது சிதம்பர ரகசியம் போல் சில நாட்களாகவே இருந்து வருகிறது என்று புகைப்பட கலைஞர் மத்தியல் பேசப்படுகிறது.

இணையத்தை கவர்ந்த தலைப்பு: இதேபோல், ஜோ பைடன் - ஸ்டாலின் சந்திப்பு குறித்த செய்திகள் பல்வேறு தலைப்புகளில் இருந்தாலும், ஒரு இந்திய தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் வித்தியாசமன அணுகுமுறையில், 81 ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் உலகப் போர் காலத்தில் அப்போதைய அமெரிக்க ஒன்றியத்தின் அதிபராக இருந்த வின்செண்ட் சர்ச்சில் - ரஷ்யா அதிபர் ஸ்டாலின் உடனான சந்திப்பு நடைபெற்றது.

அதன்பின் இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்க அதிபர் - ஸ்டாலினை சந்தித்தார் என்ற தலைப்பு (A US president meeting a Stalin after World War II) செய்தியாளர்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும், அரசியல் விமர்சகர்களிடையே பெரிதும் பாராட்டி வரும் ஒன்றாக இருக்கிறது.

இதையும் படிங்க: இலங்கையில் தருமபுரம் ஆதீன மடாதிபதி.. பூர்ண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு!

Last Updated :Sep 13, 2023, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.