சென்னை மாநகராட்சியில், கரோனா பரவல் சற்று குறைந்துள்ளது. இருந்தபோதிலும் கரோனா பரவலைத் குறைப்பதற்கு கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றச் செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது.
அண்ணா நகர், கோடம்பாக்கம் போன்ற மண்டலங்களில் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் எண்ணிக்கையும் அதற்குச் சமமாக உள்ளது. தற்போது குணமடைந்தவரின் விழுக்காடு 97 ஆக உள்ளது.
சென்னையில் நேற்று (டிச. 09) மட்டும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 347 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் கரோனா பரவல் விகிதம் 3.1 ஆக உள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் விழுக்காடும் 1 ஆக உள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 549 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 420 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், மூன்றாயிரத்து 893 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மண்டல வாரியாக சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் பட்டியல்
கோடம்பாக்கம் - 345 பேர்
அண்ணா நகர் - 395
ராயபுரம் - 215 பேர்
தேனாம்பேட்டை - 274 பேர்
தண்டையார்பேட்டை - 154 பேர்
திரு.வி.க. நகர் - 331 பேர்
அடையாறு - 328 பேர்
வளசரவாக்கம் - 192 பேர்
அம்பத்தூர் - 269 பேர்
திருவொற்றியூர் - 72 பேர்
மாதவரம் - 129 பேர்
ஆலந்தூர் - 180 பேர்
சோழிங்கநல்லூர் - 74 பேர்
பெருங்குடி - 129 பேர்
மணலி - 48 பேர்
இதையும் படிங்க: இந்தியாவில் 15 கோடியை தாண்டிய கரோனா பரிசோதனை!