ETV Bharat / state

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்..

author img

By

Published : Jan 19, 2023, 11:47 AM IST

பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்
பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால், பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிபவர்கள், தங்கி வேலை செய்பவர்கள், படிப்பவர்கள் என்று 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சிறப்பு பேருந்துகள், சொந்த வாகனம் என்று கடந்த வார இறுதியில் வெளியேறினர். பொங்கல் கொண்டாட்டங்கள் முடித்துவிட்டால், நேற்றிரவு முதல் மீண்டும் சென்னைக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் இன்று (ஜன 19) காலை முதல் அதிகப்படியானோர் பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து காவல்துறையினர் சீர் செய்து வருகின்றனர்.

ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதால் வண்டலூரில் இருந்து பெருங்களத்தூர் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு செல்லக்கூடியவர்கள் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி நூற்றுக்கணக்கானோர் பேருந்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: 'சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவது கேலிகூத்தான‌ விஷயம்' - தமிழ்மகன் உசேன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.