ETV Bharat / state

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு: ஈபிஎஸ், ஓபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!

author img

By

Published : Mar 31, 2023, 1:08 PM IST

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

orders
அதிமுக

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்குத் தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க மறுத்துத் தனி நீதிபதி கே. குமரேஷ் பாபு கடந்த மார்ச் 28ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்தும் ஒபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அவற்றில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மட்டும் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று (மார்ச். 30) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டு இருந்தது. அந்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூவரின் தரப்பில், நீதிபதி குமரேஷ் பாபுவின் தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்களையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அனைத்து மனுக்களும் இன்றைக்கு(மார்ச்.31) விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.

அதன்படி, அனைத்து மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு தரப்பினரும் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையா? அல்லது இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து ஏப்ரல் 3ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: Chennai Kalakshetra: கலாஷேத்ராவில் பாலியல் புகார்: மாநில மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.