ETV Bharat / state

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநரை கடுமையாக சாடிய சீமான்!

author img

By

Published : Apr 9, 2023, 4:23 PM IST

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது குறித்து ஆளுநர் ரவி திமிரில் பேசுகிறார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநரை கடுமையாக சாடிய சீமான்!
ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநரை கடுமையாக சாடிய சீமான்!

சென்னை: வள்ளுவர் கோட்டத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் மற்றும் பைக் டாக்சியை தடை செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (ஏப்ரல் 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “2013ஆம் ஆண்டில் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடைபெற்றது. அதே மீட்டர் கட்டணத்திற்கு இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஆட்டோவை ஓட்ட முடியும்?

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இன்று வேறு வேலை இல்லை. தமிழ்நாட்டில் இன்று வட இந்தியர்களுக்கு ஆதரவளித்து பேசுபவர்கள், எங்களையும் ஐயோ பாவம் என்று சொல்லுங்கள். சுமாட்டோ, சுவிக்கி போன்ற நிறுவனங்களை அரசே முன் வந்து நடத்த வேண்டும். மேலும் சொந்த வாகனம் இருந்தாலும், இன்று ஊபர் மற்றும் ஓலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கீழ்தான் தமிழ்நாட்டு மக்கள் வேலை செய்ய முடிகிறது.

தற்போது லிட்டருக்கு 103 ரூபாய் வரை டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலை ஏறிய பிறகு, அதே கட்டணத்திற்கு எங்களால் ஆட்டோவை இயக்க முடியாது. இது ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. டாஸ்மாக்கை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் இந்த அரசு, சுமாட்டோ, சுவிக்கி போன்ற நிறுவனங்களை தமிழ்நாடு அரசே முன்னின்று நடத்தினால் நாட்டின் வருவாயும், நாட்டின் வளமும் பெருகும். வரி கட்டி வாழ முடியவில்லை.

நாம் தமிழர் கட்சியில் அதிகாரம் இருந்தால் ஒரு நொடியில் அனைத்து பிரச்னைகளும் தீர்வு செய்யப்படும். பட்டினி, சாவு வரை போராட்டம் நடத்துவேன் என போராட்டம் நடத்திய பொன் ராதாகிருஷ்ணனுக்கு, வெளிநாட்டில் இருந்து எங்கு பணம் வந்தது? ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஆளுநர் ரவி திமிரில் பேசுகிறார். வேலைவாய்ப்பில் 80 சதவீதம் தமிழருக்கு கொடுங்கள். 20 சதவீதத்தை யாருக்கு வேண்டும் என்றாலும் கொடுங்கள்.

குஜராத், மகாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களிலும் இதனைப் பின்பற்றுகின்றனர். நிலம், வளம் என்னுடையதாக இருந்தாலும், வேலைவாய்ப்பு என்னுடையதாக இல்லை. இதைப் பேசினால் என்னை பாசிஸ்ட் என்கிறார்கள். ஆம், நான் பாசிஸ்டுதான். உரிமைக்குப் பேசினால் பாஸிஸ்ட் என்றால், அதைத் தொடர்ந்து செய்ய வேண்டி இருக்கிறது" என கூறினார்.

முன்னதாக யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்ததும், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆளுநராக நீடிக்க ஆர்.என்.ரவி அரசியலமைப்பு சட்டத்தின்படி அருகதை அற்றவர் - எம்.எச்.ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.