ETV Bharat / state

முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் - பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

author img

By

Published : Apr 9, 2021, 5:09 AM IST

no-mask-no-petrol
no-mask-no-petrol

பெட்ரோல் நிரப்ப வருபவர்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனி பெட்ரோல் வழங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை: இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகி வருகிறது. நாடுமுழுவதும் நாளொன்றுக்கு லட்சம்பேர் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாளை முதல் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாளை(ஏப்.10) பெட்ரோல் நிலையங்களில், முக கவசம் அணியாமல் பெட்ரோல் நிரப்ப வருகிறவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோயம்பேட்டில் சில்லரை விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் - வியாபாரிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.