ETV Bharat / state

என்எல்சி ஊழியர்களின் சுரங்க மரணத்திற்கு என்எல்சி தான் பொறுப்பு, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

author img

By

Published : Aug 17, 2023, 4:39 PM IST

என்எல்சி ஊழியர்களின் சுரங்க மரணத்திற்கு என்எல்சி தான் பொறுப்பு, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!
என்எல்சி ஊழியர்களின் சுரங்க மரணத்திற்கு என்எல்சி தான் பொறுப்பு, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

என்.எல்.சி. சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துக்களுக்கும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் நிர்வாகமே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை: என்.எல்.சி. சுரங்கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் விபத்துகளால் ஏற்படும் தொழிலாளர்களின் உயிரிழப்புகளுக்கு நிர்வாக அலட்சியம் தான் காரணம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 2020ம் ஆண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு, ஜூலை 1 ஆம் தேதி காலை அனல் மின் நிலையத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது 5 வது யூனிட்டில் உள்ள பாய்லர் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இதில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, என்.எல்.சி. அதிகாரிகளான கோதண்டம், முத்துக்கண்ணு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி டீக்காரமன் முன்பு இன்று(17.08.2023) விசாரணைக்கு வந்தது.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் சார்பில் வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். மேலும், சுரங்கத்தில் ஏற்படும் விபத்துகள் மூலம் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாகவும், அவ்வாறு உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடோ அல்லது கருணைத் தொகையோ நிர்வாகம் சார்பில் வழங்கவில்லை என கூறினார்.

இதையும் படிங்க: குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 21 பேர் மீது வழக்கு - சிபிஐ தகவல்!

விபத்துகள் தொடர்பாக காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என்.எல்.சி.க்கு சாதகமாக செயல்படுவதாகவும் பாலு தெரிவித்தார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள்செல்வமும், என்.எல்.சி.யில் தொடர்ச்சியாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என்.எல்.சி. தரப்பு வழக்கறிஞர் நித்தியானந்தம், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுவதோடு, உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுவதாக கூறினார்.

இடையீட்டு மனுதாரர்கள் இந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிதாக்கி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டியதுடன், தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துக்கு தங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியாது என தெரிவித்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஓரிரு விபத்துகள் என்றால் தொழிலாளர்களின் கவனக்குறைவால் மரணம் என எடுத்துக்கொள்ளலாம், ஆனால் தொடர்ச்சியாக விபத்துகள் நிகழ்வதை எப்படி எடுத்துக்கொள்வது என கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: உலமா பணியாளர்களும் இனி மானிய விலையில் டூவீலர் வாங்கலாம் - வேலூர் ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.