ETV Bharat / state

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக 60 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

author img

By

Published : Feb 15, 2023, 8:58 AM IST

கோவை உக்கடம் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தென்மாநிலங்களில் 60 இடங்களில் என்ஐஏ சோதனை!
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தென்மாநிலங்களில் 60 இடங்களில் என்ஐஏ சோதனை!

கோவை உக்கடம் கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 60 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்

சென்னை: கோயம்புத்தூர் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு தமிழ்நாடு காவல் துறை, சிபிசிஐடி என இறுதியாக என்ஐஏக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, பல முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த விசாரணையில் ஆன்லைன் மூலமாக வெடிபொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி தற்கொலை தாக்குதல் நடத்தி, மத வழிப்பாட்டு தளங்களை சேதப்படுத்தி பிரச்னையை உண்டாக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது.

இதனிடையே இந்த வழக்கில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ், இதயதுல்லா, சனோபர் அலி, முகமது தவ்பிக், உமர் பரூக், பெரோஸ் கான் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து, சம்பவ இடம் மற்றும் சதி திட்டம் தீட்டிய இடம் என பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில், இன்று (பிப்.15) தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகிக்கும் நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்துவதாக என்ஐஏ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி உள்பட பல மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னையில் மண்ணடி, கொடுங்கையூர் உள்ளிட்ட 3 இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த கோட்டைமேடு, குனியமுத்தூர் உள்பட 15 இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேல தெருவைச் சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

முசாகுதீன் மற்றும் அவரது மகன் முகமது பைசல் இருவரும் மஸ்கட் நாட்டில் டிரைவராக பணியாற்றி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியலை உளவுத்துறை, தமிழ்நாடு காவல் துறைக்கு அனுப்பியதாகவும், அதில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும் சோதனை மேற்கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: Breaking News: தமிழகம் முழுவதும் 40 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.