ETV Bharat / state

முருகனை விடுவிக்க நளினி கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Jul 6, 2023, 4:04 PM IST

முருகனை விடுவிக்க நளினி கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
முருகனை விடுவிக்க நளினி கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகனை திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகன், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2022 நவம்பர் 12ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். எனினும், முருகன் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதாலும், அவர் மீது மேலும் ஒரு வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினாலும், விடுதலைக்குப் பிறகு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், தனது கணவரை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி முருகனின் மனைவி நளினி, மத்திய அரசுக்கு மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த மனு மீது முடிவெடுக்க உத்தரவிடக் கோரி, நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கில், லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ கணவர் முருகன் விரும்புவதாகவும், பாஸ்போர்ட் பெறுவது தொடர்பாக அவர் இலங்கை தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டி உள்ளதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: தென்காசி தொகுதியில் பழனி நாடார் வெற்றிக்கு எதிரான வழக்கு - தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு!

மேலும், அகதிகள் முகாமில் உள்ள தனது கணவரான முருகன் முகாமில் இருந்து வெளி வர முடியவில்லை எனவும், அதனால் திருவான்மியூரில் வசிக்கும் தன்னுடன் சேர்ந்து வாழ வகை செய்யும் வகையில் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி உள்ளார்.

மேலும் வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்த பல வெளிநாட்டவர்களை சில நிபந்தனைகளின் அடிப்படையில் உறவினர்களுடன் தங்க அரசு அனுமதித்து உள்ளதாகவும், சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகவும், அரசு அனுமதித்து உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.

இதையும் படிங்க: மேட்டூர் கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.