ETV Bharat / state

செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு.. வெளிநாட்டில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின் ஓப்பன் டாக்!

author img

By

Published : Jun 1, 2023, 10:28 AM IST

Updated : Jun 1, 2023, 10:56 AM IST

“வெற்றிகரமாக 3233 கோடி மதிப்பீட்டிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என ஸ்டாலின் தகவல்
“வெற்றிகரமாக 3233 கோடி மதிப்பீட்டிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என ஸ்டாலின் தகவல்

சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ரூபாய் 3233 கோடி மதிப்பீட்டிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியுள்ளார்.

“வெற்றிகரமாக 3233 கோடி மதிப்பீட்டிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது” என ஸ்டாலின் தகவல்

சென்னை: சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் 9 நாட்களாக அரசு முறை பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் 3233 கோடி மதிப்பீட்டிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சென்னை திரும்பினார். சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் மேற்கொண்டு வந்த 9 நாள் அரசு முறை பயணத்தை நிறைவு செய்து தமிழகம் வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

அவரை வரவேற்பதற்காகச் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகர மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் “தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகவும் தொழில்துறை ரீதியாகவும் நல்லுறவைப் பெறக்கூடிய வகையில் இந்த பயணம் அமைந்தது.

குறிப்பாகத் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டம் என்றால் மெட்ரோ ரயில் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போன்றவை இன்று செயல்படுத்தப்பட்டு இருக்கிறது என் என்றால் அதற்கு ஜப்பானுடைய பங்கு இருக்கிறது” என தெரிவித்தார். உற்பத்தித் துறையில் முன்னோடியாக விளங்குவது ஜப்பான் நாடு. அதேபோல் ஆசியாவிலேயே உற்பத்தி தொழில் மையமாகத் தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும்.

அதுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசின் குறிக்கோள். இதற்காகத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஏற்கனவே இதற்காக ஜப்பான் சென்று ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். குறைந்தபட்சமாக 3000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திட வேண்டும் என திட்டமிட்டுச் செயல்பட்டோம்.

அதன் வகையில் முந்தைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போதைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும், தொழில்துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டு ஜப்பான் நாட்டில் இருக்கக்கூடிய பல தொழில் நிறுவனங்களிடம் பேசி அதில் முக்கிய திட்டமான 1891 கோடி ரூபாயில் குளிர்சாதன தயாரிக்கும் புதிய தொழிற்சாலை நிறுவனங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே சென்னையில் என் கண் முன்னால் கையெழுத்துப் போடப்பட்டது.

அதனையொட்டி ஐபி நிறுவனம் முனிரெத் ரூபாய் 312 கோடி, டைசன் நிறுவனம் ரூபாய் 83 கோடி, டீயூ ஹோண்டா ரூபாய் 113.9 கோடி. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களிடம் மொத்தமாகச் சேர்த்து 3233 கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பதனை உங்களிடம் மகிழ்ச்சியாகத் தெரிவிக்கிறேன்.

சிறுகுரு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டிற்கும் தொழில் கல்வி வளர்ச்சிக்கும் உயர்கல்வி திறன் பயிற்சிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பல முன்னணி நிறுவனங்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அடுத்து தொழில் கட்ட நிகழ்ச்சி மேம்பாட்டிற்கும் இந்த தொழிற்சாலைகள் தூண்டுகோலாக இருக்கும் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

அதே போல் சிங்கப்பூரிலும் ஜப்பான், டோக்கியோ நகரிலும் இருக்கக்கூடிய பல முன்னணி நிறுவனங்களுடன் தலைவர்களைச் சந்தித்தேன். அதே போல் சிங்கப்பூர் நாட்டில் இருக்கக்கூடிய சட்டம், உள்துறை, தொழில் வர்த்தகத்துறை அமைச்சர்களையும் சந்தித்து தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் திட்டங்களைக் குறித்தும் இந்தியாவில் தொழில் துறையை தொடங்குவதற்குத் தமிழ்நாடு உகந்த மாநிலமாக இருக்கும் என எடுத்துரைத்தோம்.

இந்தச் சந்திப்பின் மூலமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் இருக்கக்கூடிய பல முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்துறை தொடங்க விரும்புவதாகத் தெரிய வந்துள்ளது. இந்த தொழில் துறை நிறுவனங்களையும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்காக தொழில்துறை அலுவலர்களையும் வலியுறுத்தியுள்ளேன்.

இதனையொட்டி 2024 ஜனவரி 10, 11 சென்னையில் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்களுடைய மாநாட்டில் அவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்திருக்கிறோம். இந்த அழைப்பை ஏற்றுப் பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

பின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு, “அது பழனிச்சாமியுடைய புத்தி தன்னைப் போலவே அனைவரும் இருப்பதாக அவர் கருதிக் கொண்டிருக்கிறார். அதுதான் அதற்குக் காரணம் என பதில் அளித்துள்ளார். பின். மேகதாது அணைக்கட்டு தொடர்பான செய்தியாளரின் கேள்விக்கு இதற்கு ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்று அளித்துள்ளார்.

அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என முதலமைச்சர் கூறினார். நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய செங்கோல் பற்றிய கேள்விக்கு? “அது உண்மையாகவே சோழர் பரம்பரையினுடைய செங்கோலாக இருந்தால் தமிழ்நாட்டிற்குப் பெருமை. எனவே அது இல்லை என பல வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். செங்கோல் வாங்கிய அன்றே செங்கோல் வளைந்து விட்டது.

ஏனென்றால் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனைகளை அடித்து உதைத்து கைது செய்தது அன்றே எங்கள் செங்கோல் வளைந்து விட்டது” என முதலமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வரித்துறை சோதனை தொடர்பான கேள்விக்கு “இப்போது இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சியைப் பொருத்தவரை ஒன்று வருமானவரித் துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை வைத்துக்கொண்டு எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என அனைவருக்கும் தெரியும்.

அதன் மூலமாக அவர்களைப் பழி வாங்குவது, பயமுறுத்துவது போன்ற செயல்பாடுகள் பல மாநிலங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது தற்போது தமிழ்நாட்டில் வந்திருக்கிறது அவ்வளவு தான் அதற்குப் பதில் அளிப்பதற்கு ஒன்றுமில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைக் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதை தான் அமைச்சர் சேகர்பாபு அவர்களும் தெரிவித்துள்ளார். நாளை மாலை டெல்லி முதலமைச்சரும் பஞ்சாப் மாநில முதலமைச்சரும் என்னைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டு உள்ளனர். அவர்களை நாளை சந்திக்க உள்ளேன். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைக்கக் கூடிய செயல்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது திமுகவும் முழு அளவில் ஈடுபடும்” என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லி செல்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்... எதுக்கு தெரியுமா?

Last Updated :Jun 1, 2023, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.