ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் ரூ.918 கோடியில் 106 புதிய அறிவிப்புகள்!

author img

By

Published : Apr 19, 2023, 10:12 AM IST

Minister M Subramanian announced 106 new announcements to be carried out in government hospitals at a cost of Rs 918 crore
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனைகளில் 918 கோடி ரூபாயில் மேற்கொள்ளபட உள்ள 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.918 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள உள்ள 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவத்துறைக்கு ரூ.918 கோடியில் 106 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை,

  • பாதுகாப்பான தாய் சேய் நல சேவைகளை மேம்படுத்திட மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளடங்கிய 553 கிராஷ் கார்ட் (Crash Cart), பச்சிளங் குழந்தைகள் சிகிச்சைக்கான 16 வென்டிலேட்டர் கருவிகள் (Neonatal Ventilator), 6 உயர்ரக அதிநவீன வென்டிலேட்டர் (High Frequency Oscillatory Neonatal Ventilator) கருவிகள் மற்றும் 150 ஆக்ஸிஜன் பிளெண்டர் (Oxygen Blender) கருவிகள் ரூபாய் 6.56 கோடி செலவில் வழங்கப்படும்.
  • மதுரை அரசு இராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன சிறுநீரக கல் அகற்றும் மருத்துவ உபகரணம் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • அரசு மருத்துவமனைகளில் 50 இரத்த சுத்திகரிப்பு (Dialysis) உபகரணங்கள் ரூபாய் 3.25 கோடி செலவில் நிறுவப்படும்.
  • “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் கீழ் சுய இரத்த சுத்திகரிப்புக்கான CAPD Bags ரூபாய் 3.01 கோடி செலவில் கூடுதலாக வழங்கப்படும்.
  • சென்னை “எழும்பூர் - மண்டல கண் மருத்துவவியல் நிலையத்திற்கு” ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
  • மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஹீமோகுளோபினோபதி நோய்க்கான உயிர் காக்கும் உயர் ரக மருந்துகள் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • காசநோய் பரிசோதனைக்கான நுகர்பொருட்கள் ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் வழங்கி, அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காசநோய் சேவைகள் வழங்கப்படும்.
  • திருநெல்வேலி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், பெரம்பலூர், கும்பகோணம், தென்காசி மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் சிகிச்சைப்பெற கட்டணப் படுக்கைகள் (Pay Ward) அமைக்கப்படும்.
  • சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்ட உணவுப் பகுப்பாய்வு ஆய்வகங்களில் நுண்ணுயிரியல் பிரிவு ரூபாய் 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
  • கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் ரூபாய் 8.85 கோடி செலவில் ஐந்து உணவுப் பகுப்பாய்வு ஆய்வகங்களின் இரசாயனப் பிரிவு மேம்படுத்தப்படும்.
  • “தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்” மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4133 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.
  • சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும்.
  • 13 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவுகள் ரூபாய் 6.88 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
  • 40 அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூபாய் 24 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டிலான புதிய சி.டி ஸ்கேன் (CT Scan) கருவி வழங்கப்படும்.
  • அத்தியாவசிய மற்றும் சிறப்பு மருந்துகளுக்கு ரூபாய் 25 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அனைத்து அரசு மருத்துவ மையங்களில் ஆய்வக சேவைகள் ரூபாய் 185.24 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • 50 வட்டாரங்களில் வட்டார பொது சுகாதார அலகுகளுக்கான புதிய கட்டடங்கள் ரூபாய் 40.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு இருதய பாதுகாப்பு மருந்துகள் ரூபாய் 3.37 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • 29 அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 161.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூபாய் 146.52 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
  • சென்னை – அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 64.90 கோடி மதிப்பீட்டில் புதிய மாணவியர் விடுதி கட்டப்படும்.
  • 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் ரூபாய் 62.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சென்னை - எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடம் ரூபாய் 53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • 136 துணை சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 49.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவிலியர் பயிற்சிப்பள்ளி கட்டடம் ரூபாய் 35.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் புதிய ”எம்.ஆர்.ஐ. ஸ்கேன்” (MRI) ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் உள்கட்டமைப்பு வசதிகள் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • காரப்பேட்டை அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • புற்றுநோய் கீமோதெரபி மருந்துகளுக்கு கூடுதலாக ரூபாய் 10 கோடி வழங்கப்படும்.
  • 200 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • செங்கம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கான உபகரணங்களுடன் கூடிய கட்டடம் அமைக்கப்படும்.
  • 51 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் ரூபாய் 61.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 108 அவசர கால ஊர்திகளின் சேவையை வலுப்படுத்த ரூபாய் 21.40 கோடி மதிப்பீட்டில் 62 புதிய அவசர கால ஊர்திகள் (BLS), 13 தாய் சேய் நல ஊர்திகள் (JSSK) மற்றும் நவீன மருத்துவ கருவிகள் (98 Transport Ventilator) வழங்கப்படும்.
  • 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூபாய் 8.80 கோடி மதிப்பீட்டில் நவீன நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் வழங்கப்படும்.
  • ஐந்து அரசு மருத்துவமனைகளில், 50 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (Critical Care Blocks) ரூபாய் 118.75 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (Critical Care Block) ரூபாய் 40.05 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

மகத்தான மருத்துவக் கட்டமைப்பு

  • நான்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (Critical Care Block) ரூபாய் 95 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பினை வலுப்படுத்தும் வகையில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள 2286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடி மதிப்பீட்டில் CCTV கேமராக்கள் பொறுத்தப்படும்.
  • காசநோய் பரிசோதனைக்கான நுகர்வு பொருள்கள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வழங்கி அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காச நோய் சேவைகள் வழங்கப்படும்.
  • ஏழு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்.
  • கொடைக்கானல் கந்தர்வகோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள் உள்ள உடற்கூறாய்வு மையங்கள் ரூபாய் 10.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை திறன் ஆய்வகம் ரூபாய் 2.40 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
  • எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவிற்கு தேவையான அதிநவீன உபகரணங்கள் ரூபாய் 1.75 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வகங்ளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தர சான்றிதழ் பெறுவதற்காக நவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஆய்வக கட்டமைப்பு ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
  • மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு லேப்ரோஸ்கோபி, எலும்பு மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் ரத்த சேமிப்பு அலகிற்கான உபகரணங்கள் ரூபாய் 1.58 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.
  • தமிழ்நாட்டில் ரூபெல்லா தட்டம்மை நீக்குதல் என்ற இலக்கை 50 விழுக்காடு மாவட்டங்களில் நிறைவேற்றப்படும்.
  • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கென தனி அறை அமைத்து தரப்படும்.
  • 100 இந்திய மருத்துவமுறை மருந்தங்கள் ரூபாய் 12.98 கோடி செலவில் ஆயுஷ் நல மையங்களாக தரம் உயர்த்தப்படும்.

இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் ரூ.230 கோடி மதிப்பில் புற்றுநோய் ஆய்வு மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.