ETV Bharat / state

350 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கிய அமைச்சர்

author img

By

Published : Jun 15, 2020, 10:53 AM IST

minister-k-pandiyarajan
minister-k-pandiyarajan

சென்னை: நெமிலிச்சேரியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் அத்தியாவசிய பொருள்கள் அடங்கி தொகுப்பினை வழங்கினார்.

சென்னையை அடுத்த நெமிலிச்சேரி பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 350-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பினை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் வழங்கினார்.

அந்த நிகழ்வில் கலந்துகொண்ட திமுக கட்சியிலிருந்து விலகிய 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அமைச்சரை மாற்றுவதோ அலுவலர்களை மாற்றுவதோ என்பது முதலமைச்சர் முடிவு. அரசு அலுவர்களும், அமைச்சர்களும் சோர்ந்துவிடக் கூடாது என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுடன் இணைந்து கரோனா பாதுகாப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 54 துறைகளும் முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளன.

செய்தியாளர் சந்திப்பின்போது

திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுள்ளதுபோல் சுகாதாரத் துறை மட்டுமின்றி எந்தத் துறையிலும் உள்ள பணிகளில்கூட அவரால் வழிகாட்ட முடியும். தற்போது அமைச்சர் மாற்றத்திற்கான அவசியம் இல்லை.

அப்படித் தேவை இருந்தால் முதலமைச்சர் முடிவுசெய்வார். இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளன.

இந்த கரோனா வைரஸ் காலத்தில அடிக்கடி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதன் மூலமாக அமைச்சர்களிடையே நல்ல தொடர்பு ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், வியாசர்பாடி அம்பேத்கர் கலை அறிவியல், கல்லூரியில் 234 படுக்கைகள் கொண்ட கரோனா மையம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன எனவும் கூறினார்.

இதையும் படிங்க: புதிய வட்டாட்சியர் அலுவலக அடிக்கல் நாட்டுவிழா - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.