ETV Bharat / state

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு வழக்கு: 6 மாதத்தில் விசாரணை முடியும் என லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 4:54 PM IST

ADMK Ex Minister Kamaraj scam: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு வழக்கில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்ததையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC closed AIADMK ex-minister Kamaraj scan case for Dvac says investigation will be completed in six months
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு வழக்கு - 6 மாதத்தில் விசாரணை முடிக்கப்படும் லஞ்ச ஒழிப்புத்துறை!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்ததை ஏற்ற கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்த காமராஜ், அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காகப் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில், ரூ.350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதே போல, கடந்த 2015 முதல் 2021ம் ஆண்டு வரை பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் ரூ.2,028 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.

இதையும் படிங்க: ரூ.4,500 கோடி மணல் கொள்ளை வழக்கில் உயர் நீதிமன்றத்தில் நடந்த காரசார வாதம் - முழு விவரம்

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று (நவ.28) விசாரணைக்கு வந்தது, அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் தரப்பில், விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், இரண்டு ஆண்டுகளாகியும் முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, 6 மாதங்களில் இந்த வழக்கின் விசாரணை முடிக்கப்படும் என உறுதி தெரிவித்தார். மேலும், நீதிமன்றம் தீர்மானிக்கும் தேதியில் இரு புகார்தாரர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், ஆறு மாதங்களில் விசாரணையை முடிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பின் உத்தரவாதத்தை ஏற்று, 6 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டு வழக்குகளை முடித்து வைத்தார். மேலும், புகார்தாரர்கள் இருவரையும் டிசம்பர் 6ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கு வெகு தொலைவில் இல்லை” - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.