ETV Bharat / state

மருத்துவ மாணவி தற்கொலைக்கல்லூரி - காவல்துறை விசாரணை

author img

By

Published : Feb 10, 2022, 8:00 AM IST

medical college student commit suicide chennai medical college student commit suicide medical college student suicide issue chennai student suicide issue Medical student suicide மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை மாணவி தற்கொலை சென்னையில் மருத்துவ மாணவி தற்கொலைக்கல்லூரி
மாணவி தற்கொலை

சென்னையில் மருத்துவக்கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: கே கே நகர் மத்திய பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருபவர் வரதராஜ். இவர் விமான நிலையத்தில், சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சக்தி பிரியா என்ற 20 வயது மகள் இருந்தார்.

இவரது மகள் சக்தி பிரியா, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நன்றாக படித்து வந்த இவர், சில நாள்களாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை

இந்நிலையில், நேற்று முந்தினம் (பிப். 8), வரதராஜும் அவரது மணைவியும், துணி எடுப்பதற்காக வண்ணாரப்பேட்டை சென்றிருந்தனர். அப்போது, சக்தி பிரியாவிற்கு அவரது தந்தை, அலைபேசி வாயிலாக அழைத்துள்ளார். இவரது அழைப்பை சக்தி பிரியா ஏற்க வில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர், உடனடியாக வீடு திருபியுள்ளனர். அப்போது சக்தி பிரியா தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்தி பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

medical college student commit suicide chennai medical college student commit suicide medical college student suicide issue chennai student suicide issue Medical student suicide மருத்துவக்கல்லூரி மாணவி தற்கொலை சென்னையில் கல்லூரி மாணவி தற்கொலை மாணவி தற்கொலை சென்னையில் மருத்துவ மாணவி தற்கொலைக்கல்லூரி
எதற்கும் தற்கொலை தீர்வல்ல

இது குறித்து தகவலறிந்த கே கே நகர் காவல்துறையினர், சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்து, சக்தி பிரியாவின் உடலை கைப்பற்றி, உடற்கூராய்விற்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாகன விபத்தில் காவலர் உயிரிழப்பு: அஞ்சலி செலுத்திய ஆணையர் ரவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.