சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவருக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார்.
இந்த நிலையில் அப்பெண்ணுக்கு கிட்னியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனிடையே, அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் அவரின் மகள் மட்டுமே அவர் உடன் இருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை.2) இரவு அப்பெண் மருத்துவமனையில் தூங்கிக் கொண்டிருந்து உள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் கூச்சலிடுவே அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை செய்தபோது அவர் துப்புரவுப்பணியாளர் எனத்தெரியவந்தது. இதையடுத்து, அவரை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தர்மபுரியில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோவில் கைது