ETV Bharat / state

கணவன் - மனைவி இடையே தகராறு: கணவன் தற்கொலை

author img

By

Published : Jan 22, 2021, 8:56 PM IST

Man committed suicide
Man committed suicide

படுக்கையறைக்கு சென்ற வேங்கையன், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை எழுந்து படுக்கை அறையை திறந்து பார்த்தபோது வேங்கையன் தற்கொலை செய்து கொண்டது அவரது மனைவிக்கு தெரியவந்தது.

சென்னை: பல்லாவரம் அருகே கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் வசித்து வருபவர் வேங்கையன் (47), இவரது மனைவி கலைவாணி (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் தினமும் மது அருந்திய வேங்கையன், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு வேங்கையன் அதிகமாக மது அருந்தி விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் படுக்கையறைக்கு சென்ற வேங்கையன், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை எழுந்து படுக்கை அறையை திறந்து பார்த்தபோது வேங்கையன் தற்கொலை செய்து கொண்டது அவரது மனைவிக்கு தெரியவந்தது.

பின்னர் சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.