ETV Bharat / state

மதுரவாயலில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை.. போலீசார் தனிப்படை அமைத்து தேடல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 9:57 AM IST

famous-rowdy-was-killed-in-maduravayal-police-set-up-a-special-force-to-search
மதுரவாயலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை..போலீசார் தனிப்படை அமைத்து தேடல்

மதுரவாயலில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிழங்கு சரவணன்(41). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலைவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு (அக்-11) வானகரம் பகுதியில் சரவணன் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், கிழங்கு சரவணனை வழிமறித்து சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் கிழங்கு சரவணன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி உள்ளார். பின்னர், அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளது.

இதனையடுத்து, இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்தக் காயங்களுடன் மயங்கிக் கிடந்த கிழங்கு சரவணனை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிழங்கு சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கிழங்கு சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சரவணன், மயிலாப்பூரில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்த நிலையில், ஏற்கனவே பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமாருக்கு எதிராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து, கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பீகார் ரயில் விபத்து; 4 பேர் உயிரிழப்பு - 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.