ETV Bharat / state

‘கொடநாடு குற்றவாளிக்கு ஜாமீன் பெற்றதே நீங்கள் தான்’ - திமுக மீது எடப்பாடி காட்டம்!

author img

By

Published : Jul 19, 2019, 3:11 PM IST

சென்னை: கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமீன் பெற்றுத்தந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

TN CM

சட்டப்பேரவையில் காவல், தீயணைப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் பத்திரிகையாளர் ஒருவர் முதலமைச்சருக்கு சவால் விடுகிறார் எனவும், அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொடநாடு தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், அது குறித்து விரிவாக விவாதிக்க முடியாது எனவும், பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சரைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கொடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் எனவும், அவர்களை நீதிபதி விடுதலை செய்துவிட்டார் எனவும் தெரிவித்தார்.

பின்னர் பேசிய முதலமைச்சர், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு யாருமே ஜாமீன் கொடுக்க முன்வராத நிலையில், திமுகவினர் தான் அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத்தந்தனர் என்றும் கூறினர்.

Intro:nullBody:கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு திமுகவினர் ஜாமின் பெற்றுத்தந்ததாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, கொடநாடு, கொலை, கொள்ளை சம்பவத்தில் பத்திரிகையாளர் ஒருவர் முதலமைச்சருக்கு சவால் விடுகிறார் எனவும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொடநாடு தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது பற்றி விரிவாக விவாதிக்க முடியாது எனவும் பொய்யான குற்றச்சாட்டை கூறிய பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், கொடநாடு விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டது எனவும், நீதிபதி அவர்களை விடுதலை செய்துவிட்டார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு யாருமே ஜாமின் கொடுக்க முன்வராத நிலையில் திமுகவினர் தான் அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத்தந்தனர் எனவும் கூறினார்.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.