ETV Bharat / state

மறுசுழற்சியற்ற சிறுநீரக டயாலிசிஸ் முறை தொடக்கம்

author img

By

Published : Dec 7, 2021, 8:22 AM IST

மறுசுழற்சி அற்ற சிறுநீரக டயாலிசிஸ் முறை தொடக்கம்
மறுசுழற்சி அற்ற சிறுநீரக டயாலிசிஸ் முறை தொடக்கம்

மறுசுழற்சி அற்ற சிறுநீரக டயாலிசிஸ் முறை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரகவியல் துறை சார்பில் மறு சுழற்சியற்ற ஒற்றைப் பயன்பாட்டு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை முறை எனப்படும் டயாலிசிஸ் மருத்துவ முறையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "ஒரு நபருக்கு டயாலிசிஸ் சிகிச்சை எனப்படும் ரத்த மறுசுழற்சி அடிப்படையில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை செய்யப்பட்டுவருகிறது. அந்த சிகிச்சைக்காக ஒரு நபருக்கு ரத்த சுத்திகரிப்பு முறையானது குறைந்தது மூன்று நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்படும்.

அதிகபட்சமாக வாரம் ஒருமுறை மாற்றப்படும். இதற்காக உடலில் ஒரு கருவி பொருத்தப்படும். அந்தக் கருவியை மறுசுழற்சி மூலம் ஆறு முதல் எட்டு முறை சுத்தம் செய்து பயன்படுத்த முடியும். அவ்வாறு சுத்தம் செய்யும்பொழுது நோயாளிக்கும், மருத்துவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால், இந்தியாவில் முதல்முறையில் ஒரே கருவி மூலம் டயாலிசிஸ் செய்யப்படும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால், தொற்று பரவாது பாதுகாப்பானது. கரோனா காலத்தில் கரோனா அல்லாத தொற்று நோய்களிலும் கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கையுடன் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் 37.83 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 15.68 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம், 10.69 லட்சம் சர்க்கரை நோயாளிகளும், ரத்த அழுத்தமும், நீரிழிவு நோயும் இணைந்து 7.82 லட்சம் பேரும், இதர நோய்களுடன் 3.62 லட்சம் பேரும் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இவை சிறுநீரக நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட காரணமாகிறது. முதுகலை மருத்துவப்படிப்பு கலந்தாய்வு நடத்துவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. ஜனவரி 6ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகு அகில இந்திய இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நடைபெற வேண்டும்.

அதன் பிறகு மாநில கலந்தாய்வு நடைபெறும். இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு கலந்தாய்வை நடத்துவதற்கு வலியுறுத்தியுள்ளது என்பதையும் மருத்துவ மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.