ETV Bharat / state

Kalaignar Kottam: பீகார் முதல்வர் நிதீஷ்குமார் திருவாரூர் வருகை ரத்து! : உடல்நலக்குறைவு காரணமாக முடிவு

author img

By

Published : Jun 20, 2023, 7:04 AM IST

Updated : Jun 20, 2023, 1:55 PM IST

Etv Bharat
Etv Bharat

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைக்க திட்டமிட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று(ஜூன் 20) மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் திறப்பு விழா திருவாரூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இத்திறப்பு விழாவில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கோட்டத்தை திறந்து வைக்கும் அதே வேளையில், கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை தேஜஸ்வி யாதவ் திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக தமிழ்நாட்டில் சிறப்பாகப் பணியாற்றிய அரசியல்வாதிகளுக்கும் இலக்கியப் பேராசிரியர்களுக்கும் ஒரு கோட்டம் அமைப்பது உண்டு. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் இதற்கான சான்றாகும். எனவே தமிழில் 'கோட்டம்' என்பது மிகவும் மதிக்கப்படும் ஒருவரின் நினைவாக கட்டப்பட்ட கட்டமைப்பைக் குறிக்கிறது.

இது தொடர்பாக இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதலமைச்சரான தனது தந்தையின் சிலையை திறந்து வைப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, ஜூன் 20ஆம் தேதி திருவாரூரில் ‘கலைஞர் கோட்டத்தை’ ஐக்கிய ஜனதா தளம் (ஐக்கிய) தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆளும் திமுகவின் உயர்மட்ட வியூகக் குழு ஞாயிற்றுக்கிழமை கூடிய பிறகு இதற்கான அறிவிப்பினை வெளியிட்டது. அதில் திமுகவின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பிறகு நிதீஷ் குமாரை அழைக்கும் முடிவு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக அல்லாத தலைவர்களை சென்றடைய ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

சமீப வாரங்களில், நிதிஷ் குமார், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழுத்தம் கொடுக்க, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தேசிய அளவில் பாஜக அல்லாத பரந்த தளத்தை உருவாக்கப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக பாஜக அல்லாத முதலமைச்சர்களில் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் கட்சி மற்றும் அரசு விழாக்களுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த திறப்பு விழாவிற்கு முன்னதாக வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற்றன.

இதையும் படிங்க: Minister Ponmudi: அமைச்சர் பொன்முடிக்கு புதிய சிக்கல்.. விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!

Last Updated :Jun 20, 2023, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.