ETV Bharat / state

கத்தி முனையில் இளம்பெண்ணிடம் நகைபறிப்பு; 4 பேர் கைது!

author img

By

Published : Aug 5, 2019, 2:35 PM IST

arrest

சென்னை: பியூட்டி பார்லரில் புகுந்து பெண் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகைபறித்தது தொடர்பாக நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அண்ணாநகர் முதல் தெருவில் கார்த்திகா என்பவர் பியூட்டி பார்லரில் பணிபுரிகிறார். இவர் காலை 11 மணியளவில் பியூட்டி பார்லர் திறந்து இரவு 8 மணிக்கு பூட்டிவிடுவார். நேற்று இரவு வழக்கம்போல் பியூட்டி பார்லர் மூடும்போது இரண்டு இளைஞர்கள் வந்து எவ்வளவு நேரம் கடை திறந்திருக்கும் என கேட்டறிந்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் நான்கு நபர்கள் மேலே வந்து மசாஜ் செய்ய வேண்டும் என்று கேட்டு அங்கிருந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கழுத்தில் கத்தியை வைத்து நான்கு சவரன் தங்க சங்கிலியை பறித்ததோடு மட்டுமல்லாது அவரை தாக்கினர்.

அப்போது வலி தாங்கமுடியாமல் அந்தப் பெண் கூச்சலிட்டதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:சென்னை அண்ணாநகரில் பியூட்டி பார்லரில் புகுந்து பெண் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 4 சவரன் நகை பறிப்பு.  இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Body:சென்னை அண்ணாநகரில் பியூட்டி பார்லரில் புகுந்து பெண் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 4 சவரன் நகை பறிப்பு.  இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (27) அண்ணா நகர் முதல் தெருவில் கார்த்திகா  என்பவர் பியூட்டி பார்லரில் பணிபுரிகிறார். இவர் காலை 11 மணி அளவில் பியூட்டி பார்லர் திறந்து இரவு 8 மணிக்கு பூட்டி விடுவார்.நேற்று இரவு வழக்கம் போல் பியூட்டி பார்லர் மூடும்போது இரண்டு வாலிபர்கள் வந்து எவ்வளவு நேரம் திறந்து இருக்கும் என கேட்டறிந்து சென்று உள்ளனர். மேலும் 2 மசாஜ் செய்யும் பணிபெண்கள் இருந்ததாகவும்  கூறப்படுகிறது.  சிறிது நேரத்தில் 4 நபர்கள் மேலே வந்து மசாஜ் செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும் அப்போது ஊழியர் கார்த்திகா டைம் முடிந்துவிட்டது நீங்க நாளை வாங்க என கூறியுள்ளார். தீடீர் என்று கீர்த்தனா இடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட 4 நபர்கள் திடீர் என்று கழுத்தில் கத்தியை வைத்து 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து கத்தியை எடுத்து கிர்த்தனா தொடை பகுதி மற்றும் கையில் திருப்பி அடித்து உள்ளனர். கீர்த்தனா அடி தாங்கமுடியாமல் சத்தம் போட்டதால் பயந்து போன நான்கு பேரும் தப்பி சென்றனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.