ETV Bharat / state

சென்னையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 2:32 PM IST

islamic-movements-demonstrate-in-support-of-the-palestinian-people
பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் ‌என வலியுறுத்தி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை: காசா பகுதியில் இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையேயான போர் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் – இஸ்ரேல் இடையிலான போர் 20 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், அங்கு மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டுவரக் கோரி ஜோர்டான் அரசு, ஐ.நா. பொதுச் சபையில் வரைவுத் தீர்மானம் கொண்டுவந்தது.

ஆனால், இன்னும் போர் நிறுத்தம் குறித்த எந்த ஒரு முடிவும் தெரியவில்லை. மேலும் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் கட்சி கூட்டமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறன்.

இந்நிலையில் பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் அரசையும், அதற்கு ஆதரவு வழங்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசுகளை கண்டித்து சென்னை எழும்பூரில் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடபெற்றது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, “பாலஸ்தீனம் மீது யூத அரசு வன்மையான தாக்குதலை நடத்தி வருவதை கண்டிக்கிறோம். பாலஸ்தீன மக்கள் சொந்த மண்ணுக்காக போராடுவதை பயங்கரவாதிகள் என கூறுவதை ஏற்க்க முடியாது. காந்தி காலத்தில் இருந்து பாலஸ்தீன ஆதரவையை இந்தியா எடுத்தது ,அதே நிலையை தற்போதும் தொடர வேண்டும்.

பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஓரணியில் நின்று நடவடிக்கை எடுப்பது மட்டும் மல்லாமல் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும். ஐ.நா-வின் போர் நிறுத்தத் தீர்மானம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என தெரிவித்தனர்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், கொடூரமான பாதிப்புக்குள்ளாகியுள்ள பாலஸ்தீன் மக்களுக்கு உலக நாடுகள் உதவிட வேண்டும். மேலும் இஸ்ரேல் ஆதரவு என்ற நிலைப்பாட்டைப் பிரதமர் மோடி மாற்றிக் கொள்வதுடன் ஐ.நா. மன்றத்தில் காந்தியடிகளின் வழிகாட்டல் மற்றும் பாரம்பரியமான நமது நிலைப்பட்டின் அடிப்படையில் சுதந்திர பாலஸ்தீனம் அமைய இந்தியா உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்தியாவிலிருந்து பாலஸ்தீனத்திறகு மேலும் அதிகமான உதவிகளை அனுப்பிட மத்திய அரசு உடனடியாக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். மேலும் பாலஸ்தீன மக்களுக்கு அனைத்து நாடுகளும் உதவிட வேண்டுகிறேன்.

பாலஸ்தீன நாட்டில் ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன. மேலும் நியாயம் என்பது பாலஸ்தீன பக்கமே இருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

பனகல் மாளிகையில்: அதே போல் சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடந்த மற்றொரு போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் சார்பில் நேற்று(அக்.31) ஆர்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: "மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க தாலியை கழற்றி தரத் தயார்" - திமுக பெண் கவுன்சிலர் ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.