ETV Bharat / state

"தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க நிலங்கள் தயாராக இருக்கு" - ஓ. பன்னீர்செல்வம்

author img

By

Published : Dec 10, 2019, 6:02 PM IST

deputy cm o.panneerselvam
deputy cm o.panneerselvam

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு அரசிடம் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தொடங்குவது குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துடன் அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதில் அமெரிக்க - இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் மிஸ் நிஸா பிஸ்வால், மேலாண்மை இயக்குநர் அம்பிகா ஷர்மா, பெட்ரேஷன் ஆப் இந்தியன் சேம்பர் காமர்சின் ஆலோசகர் முராரி மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், "உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளைக் கவரும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையைழுத்தாகியுள்ளன. இதனையடுத்து நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியில் அமெரிக்க இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும் பங்காற்றும்.

தொழில் துறையில் நிலவும் முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த சுற்றுச்சூழல் போன்றவற்றால் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகளில் அமேசான், ஐபிஎம், ஃபாக்ஸ்கான், கேட்டர் பில்லர், மற்றும் போயிங் போன்ற உலகப் புகழ்பெற்ற கம்பெனிகள் தமிழ்நாட்டில் முதலீடுகளை செய்துள்ளனர்.

இதனால், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவப் பூங்காக்களில் ஏறக்குறைய எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இதன் மூலம் புதிய தொழில்களைத் தொடங்கலாம்.

2018ஆம் ஆண்டிலிருந்து புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை, புதிய தொழில் தொடங்குதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை, உணவுப் பதப்படுத்தும் கொள்கை, டெக்ஸ்டைல்ஸ் கொள்கை, எரிசக்தி கொள்கை ஆகியவற்றை மட்டுமின்றி மின் பேருந்து கொள்கையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : போனா வராது பொழுது போனா கிடைக்காது! - வெங்காயம் வாங்க திரண்ட மக்கள்

Intro:Body:*தமிழகத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசிடம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.*

சென்னை தலைமை செயலகத்தில், தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடங்குவது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடன் அமெரிக்க-இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அமெரிக்க- இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் மிஸ் நிஸா பிஸ்வால், மேலாண்மை இயக்குனர் அம்பிகா ஷர்மா, பெட்ரேஷன் ஆப் இந்தியன் சேம்பர் காமர்சின் ஆலோசகர் முராரி மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது அவர்களிடம் பேசிய துணை முதலமைச்சர், உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளை கவரும் வகையில்வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையைழுத்தாகியதாகவும், அடுத்து நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியில் அமெரிக்க இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும் பங்காற்றும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழக தொழில் துறையில் நிலவும் முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த சுற்றுச்சூழல் போன்றவற்றால் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகளில் அமேசான், ஐபிஎம், ஃபாக்ஸ்கான், கேட்டர்பில்லர், மற்றும் போயிங் போன்ற உலகப் புகழ்பெற்ற கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடுகளை செய்துள்ளனர்.

இதனால் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் இருப்பதாகவும், இதன் மூலம் புதிய தொழில்களை துவங்கலாம் என்று கூறியுள்ளார்.

அதேபோல் தமிழகத்தில் முதலீட்டாளருக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சி பெருகும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகதாக கூறிய துணை முதல்வர், 2018 ஆம் ஆண்டிலிருந்து புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை, புதிய தொழில் தொடங்குதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை, உணவு பதப்படுத்தும் கொள்கை, டெக்ஸ்டைல்ஸ் கொள்கை, எரிசக்தி கொள்கை ஆகியவற்றை மட்டுமின்றி மின் பேருந்து கொள்கையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலம் நிலவுவதாகவும், தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழகம் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.