சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் மோசமான வானிலை குறித்து இன்று (மே 13) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கடலோர காவல் படை, இந்த எச்சரிக்கையை பல்வேறு உள்ளூர் மொழிகளில் அறிவித்து வருகிறது.
தூத்துக்குடி கடற்பகுதியில் கடலோர காவல் படைக்குச் சொந்தமான வஜ்ரா கப்பல் மூலம், அங்குள்ள மீன்பிடி படகுகள், வணிகக் கப்பல்களை உடனடியாக கரைக்குத் திரும்பும்படியும், அருகே இருக்கக்கூடிய கரை அல்லது துறைமுகத்தில் பாதுகாப்பாக தஞ்சமடையும்படியும் இந்திய கடலோர காவல் படையினர் எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம் - முதலமைச்சர் ஸ்டாலின் உரை!