ETV Bharat / state

முதன்முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் சென்னை வருகை: ஏன் தெரியுமா?

author img

By

Published : Aug 7, 2022, 7:44 PM IST

இந்தியாவில் முதன்முறையாக அமெரிக்க கடற்படை கப்பல் பழுது நீக்குவதற்காக சென்னை வந்தடைந்தது.

அமெரிக்கா கடற்படை கப்பல் சென்னை வருகை
அமெரிக்கா கடற்படை கப்பல் சென்னை வருகை

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் எல் அண்டு டி கப்பல் முனையம் உள்ளது. இந்த முனையத்திற்கு அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்று பழுது நீக்குவதற்காக வந்தடைந்தது.

இது தளவாடங்களை சுமந்து செல்லும் கப்பல் ஆகும். தற்போது இந்த கப்பலில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி கப்பல் முனையத்திற்கு வந்துள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையேயான நல்லுறவு அம்சமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று பழுது நீக்குவதற்காக வருவது இதுதான் முதன்முறையாகும். கப்பலை மத்திய பாதுகாப்பு துறை செயலாளர் அஜய்குமார் வரவேற்றார்.

இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட நபர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.