ETV Bharat / state

ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுத்தவர்கள் மீது வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறையினருக்கு உத்தரவு!

author img

By

Published : Jan 20, 2020, 11:17 PM IST

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஆவடி அருகே ஆழ்துளைக் கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஆவடி காவல் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தாலுகாவிலுள்ள கோனாம்பேடு, நாராயணபுரம் கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்கக் கோரியும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, எட்டு வாரங்களில் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததையடுத்து, கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஐந்து ஆழ்துளைக் கிணறுகளையும் ‘சீல்’ வைத்துவிட்டதாகவும், இதுசம்பந்தமாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில், மசூதி, வணிக வளாகம் உள்ளிட்டவைகள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியை ஆக்கிரமித்து வசித்து வந்த 17 பேருக்கு பூச்சிஅத்திப்பேடு பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் குடியிருப்பில் மாற்று இடம் வழங்க இருப்பதாகவும், அதன்பின் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சியவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின்மீது எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆவடி காவல் துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: இந்து மகாசபை கூட்டத்திற்கு முன் அனுமதி கோரிய வழக்கு - காவல் துறைக்கு புதிய உத்தரவு

Intro:Body:ஆவடி அருகில் உள்ள கோனாம்பேடு, நாராயணபுரம் கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுத்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, ஆவடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தாலுகாவில் உள்ள கோனாம்பேடு, நாராயணபுரம் கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்கக் கோரியும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து எட்டு வாரங்களில் அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து, கோனாம்பேடு கிராம பொது நல சங்கம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஐந்து ஆழ் துளை கிணறுகளையும் ‘சீல்’ வைத்து விட்டதாகவும், இதுசம்பந்தமாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில், மசூதி மற்றும் வணிகவளாகம் இடிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வந்த 17 பேருக்கு பூச்சி அத்திப்பேடு பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் குடியிருப்பில் மாற்று இடம் வழங்க இருப்பதாகவும், அதன்பின் அந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சியவர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் மீது எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.