ETV Bharat / state

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையைச் சேர்ந்தவரா?

author img

By

Published : Oct 22, 2020, 7:26 AM IST

விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

சென்னை: சமூக வலைதளத்தில் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த நபரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் '800' என்ற படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என சில அமைப்புகள் எதிராகவும், ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் முத்தையா முரளிதரன் வெளியிட்ட அறிக்கையில் விஜய் சேதுபதி '800' படத்திலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் ரித்தீஷ் என்பவர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கும் வகையில் மிகவும் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டு இருந்தார்.

திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தானாக முன்வந்து அந்த நபரின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஐபி முகவரி வைத்து காவலர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆபாசமான கருத்துகளை பரப்பிய நபர் இலங்கையில் இருப்பதை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் மத்திய அரசுக்கு இந்த வழக்கு குறித்து கடிதம் எழுதி இருநாட்டு அரசின் உதவியுடன் அந்த நபரை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

மத்திய அரசு மூலம் இன்டர்போல் காவல்துறையினரின் உதவியை நாடவும் முடிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.