ETV Bharat / state

தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவி - கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை

author img

By

Published : Dec 15, 2021, 10:42 PM IST

தாம்பத்தியத்திற்கு மறுத்ததால் மனைவியைக் கொன்ற கணவன்..!
தாம்பத்தியத்திற்கு மறுத்ததால் மனைவியைக் கொன்ற கணவன்..!

தாம்பத்திய உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேலூர் :ஆரணியைச் சேர்ந்த 55 வயதான சமையல்காரர் சேகர் தனது மனைவி ஆரவள்ளியுடன் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி சேகர் தனது மனைவியை தாம்பத்தியத்திற்கு அழைத்தப்போது, மனைவி மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சேகர், ஆரவள்ளியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

இதுகுறித்து எம்.ஜி்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி சேகருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:எடப்பாடி பழனிசாமி செலவு செய்த பணத்துக்கு 100 வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம் - வழக்கறிஞர் குற்றஞ்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.