ETV Bharat / state

காதல் மனைவி கழுத்தறுத்து கொலை.. 2 நாட்களாக சடலத்துடன் இருந்த கணவர்! - நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 1:05 PM IST

Avadi murder issue
ஆவடியில் காதல் மனைவி கழுத்தறுத்து கொலை

Avadi murder issue: ஆவடியில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: ஆவடி சின்னம்மன் கோயில், ஜீவா தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (30). இவர் அம்பத்தூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாரம்மாளும் அம்பத்தூர் பகுதியில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் நீண்ட நாட்களாக காதலர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடைய சாரம்மாளுக்கு வேறு ஒரு நபருடன் ஏற்கனவே திருமணம் நடைபெற்றதாகவும் அந்த விஷயம் ஜான்சனுக்கு தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே நடந்த தகராறில், வாக்குவாதம் முற்றி ஜான்சன் தனது மனைவி சாரம்மாளை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த கத்தியால் சாரமாளின் கழுத்தை அறுத்து ஜான்சன் கொடூரமாக கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆத்திரத்தில் கொலை செய்த ஜான்சன், மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல், சடலமாக கிடக்கும் தனது மனைவியின் உடலை ஒரு கோணிப்பையில் போட்டு மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக பிரேதத்துடன் அதே வீட்டில் ஜான்சன் வசித்து வந்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல், இறந்த உடலில் இருந்து துர்நாற்றம் வரத் துவங்கியதால், அதைத் தாங்க முடியாத ஜான்சன், ஆவடி காவல் நிலையத்தில் நேற்று (செப். 19) மாலை சரண் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் அவரை அழைத்து கொண்டு, சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று உடலைக் கைப்பற்றிய போலீசார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், கொலை செய்த ஜான்சனை பூந்தமல்லி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேகத்தில் தனது மனைவியை கொலை செய்து விட்டு இரண்டு நாட்கள் பிணத்துடன் இருந்து விட்டு, பின்னர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: போதையில் தகராறு.. நண்பனை கட்டையால் கொடூரமாக தாக்கிய மதுவெறியர் - வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.