ETV Bharat / state

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் - இதுதான் காரணமா?

author img

By

Published : Mar 12, 2022, 4:11 PM IST

husband-killed-his-wife-for-lillegal-relationship
husband-killed-his-wife-for-lillegal-relationship

சென்னையில் தகாத உறவு காரணமாக எழுந்த பிரச்சனையால் மனைவியை கொன்றுவிட்டு, தற்கொலை என நாடகமாடிய கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை : பிராட்வே புத்திசாகிப் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்(37). கூலி தொழிலாளியான அப்துல் ரகுமானுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு யாஸ்மின்(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் நீண்ட நேரமாக யாஸ்மின் உறக்கத்தில் இருந்து எழாததால், சந்தேகமடைந்த அவரது தாயார் பரிதாபானு அருகிலிருந்த மருத்துவரை அழைத்து வந்து பார்த்தபோது யாஸ்மின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்த யாஸ்மினின் உடலை உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், குடும்ப தகராறில் யாஸ்மின் தூக்க மாத்திரை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாக யாஸ்மினின் கணவர் அப்துல் ரகுமான் காவல்துறையில் தெரிவித்த நிலையில், காவல்துறையினர் இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக யாஸ்மின் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே இறந்திருப்பதாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் யாஸ்மினின் கணவரான அப்துல் ரகுமானைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் யாஸ்மின் அப்துல் ரகுமானின் தம்பியுடன் பல மாதங்களாக தகாத உறவில் இருந்து வந்ததாகவும், அந்த தொடர்பை துண்டிக்குமாறு தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் முன்னிலையில் சமாதானம் பேசி முடித்ததாகவும், ஆனால் தொடர்ந்து யாஸ்மின் அவரது தம்பியுடன் தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரத்தில் உறங்கச் சென்றபின் யாஸ்மினின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடியதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த காவல்துறையினர் அப்துல் ரகுமானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : 10 ஆண்டு காதல், 5 ஆண்டு திருமண வாழ்க்கை - மனைவியை கைவிட்ட கணவர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.