ETV Bharat / state

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

author img

By

Published : Nov 28, 2021, 5:45 PM IST

Updated : Nov 28, 2021, 6:05 PM IST

schools leave due to rain  holidays for educational institutes  school colleges leave due to heavy rain  school colleges leave in tamil nadu  தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  கல்விநிலையங்களுக்கு நாளை விடுமுறை  எந்தெந்த மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை  கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
schools leave

தமிழ்நாட்டில் தொடர் கனமழை காரணமாக சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரியிலும் இந்த நிலை தொடர வாய்ப்புள்ளது.

மேலும் நவம்பர் 30ஆம் தேதிவரை தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (நவ. 29)

  • சென்னை
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • செங்கல்பட்டு
  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி

ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் நாளை (நவ. 29), நாளை மறுநாள்(நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: Puducherry Rains: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப்பாதிப்பு

Last Updated :Nov 28, 2021, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.