ETV Bharat / state

கெளரிவாக்கம் நகைக்கடை கொள்ளை வழக்கு... 3 வடமாநில சிறார்கள் கைது...

author img

By

Published : Nov 26, 2022, 8:00 PM IST

சென்னை கெளரிவாக்கம் நகைக்கடை கொள்ளை வழக்கில் வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெளரிவாக்கம் நகைக்கடை கொள்ளை: வடமாநில சிறார்கள் கைது
கெளரிவாக்கம் நகைக்கடை கொள்ளை: வடமாநில சிறார்கள் கைது

சென்னை: தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ப்ளுஸ்டோன் நகைக்கடையில், இன்று அதிகாலை 4.20 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் பைப் வழியாக ஏறிச் சென்று லிப்ட் மூலம் இறங்கி கடைக்குள் சென்று கொள்ளையடித்துள்ளனர். இந்த திருட்டு நடப்பது குறித்து கடையின் மேலாளர் ஜெகதீசனுக்கு அலாரம் மூலம் தகவல் சென்றுள்ளது.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஜெகதீசன் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சேலையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணையை முடுக்கினர்.

காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர் சந்திப்பு

இதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில நபர் என்பது உறுதிபடுத்தப்பட்டது. அதன்பின்னர் அப்பகுதி முழுவதும் தனிப்படை போலீசார் சோதனையிட்டு அருகில் சுற்றித் திரிந்த ஒரு நபரை கைது செய்தனர். தொடர்ந்து இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக சோழிங்கநல்லூர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று காலை 6 மணியளவில் கெளரிவாக்கத்தில் ப்ளுஸ்டோன் நகைக்கடையில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் உதவியோடு 8.30 மணியளவில் குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இருவர் என மூன்று சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 1½ கோடி மதிப்பிலான நகைகள் மீட்கப்பட்டது. கொள்ளையர்கள் லிப்ட் துவாரம் வழியாக கடைக்குள் சென்று கதவை உடைத்து திருடியுள்ளனர். 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கடையில் இருந்த நிலையில், லாக்கரில் இருந்த நகை தவிர்த்து மீதியிருந்த நகைகள் கொள்ளை போனது.

திருடிய நகைகளை வீட்டில் வைத்துவிட்டு கொள்ளையர்கள் வெளியில் வந்து சுற்றித் திரிந்துள்ளனர். மேலும் அவர்கள் 3 மாதமாக வாடகை வீட்டில் தங்கி நகை கடை பக்கத்தில் உள்ள ரோஸ் மில்க் ராஜா என்ற கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர்” என கூறினார்.

இதையும் படிங்க: நகைக்கடையில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை... கொள்ளையர்கள் கைவரிசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.