ETV Bharat / state

‘அமைச்சர் துரைமுருகன் உடன் மத்திய அமைச்சரை சந்திப்போம்’ - காவிரி விவகாரம் குறித்து ஜி.கே.வாசன் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 8:52 PM IST

Updated : Sep 17, 2023, 10:25 PM IST

டெல்லி செல்லும் தமிழக எம்.பி.க்கள்
டெல்லி செல்லும் தமிழக எம்.பி.க்கள்

G.K.Vasan: நாளை நடக்கவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் டெல்லி சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

டெல்லி செல்லும் தமிழக எம்.பி.க்கள்

சென்னை: சமீபத்தில் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகளின் காவிரி பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இதனை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேசவுள்ளார்.

மேலும், நாளை டெல்லியில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில், தமிழக எம்பிக்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர். சிறப்புக் கூட்டதிற்குப் பிறகு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி எம்பிக்களும் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை டெல்லியில் அவரது அலுவலகத்தில் சந்திக்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் நாளை டெல்லியில் நடக்கவிருக்கம் நிலையில், அதில் பங்கு பெற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை துவங்க இருக்கிறது. இன்று மாலை டெல்லியில் இரு அவைகளிலுள்ள கட்சிகளுடைய தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நான் இன்று டெல்லி செல்ல உள்ளேன்.

இதையும் படிங்க: 'பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

காவிரி பிரச்சினை இன்று தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. காவிரி விவகாரம் தமிழக டெல்டா விவசாயிகளுக்கு பயிர் பிரச்சினையாக இல்லாமல், உயிர் பிரச்சினையாக உள்ளது. தமிழக விவசாயிகளின் உண்மை நிலையை அறிந்து, தெரிந்து புரிந்து கொண்டு கர்நாடக அரசு காவிரி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று குழுவினுடைய கோட்பாடு மற்றும் அறிக்கையை ஏற்று கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும்.

டெல்லியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கிறது. இந்த சிறப்புக்கூட்டத்தில் தமிழ்நாட்டு நீர்வளத்துறை அமைச்சரும் பங்கேற்க உள்ளார். சிறப்பு கூட்டத்திற்குப் பின்னர் அமைச்சர் துரைமுருகன் காவிரி விவகாரம் குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளார்.

அவருடன் சேர்ந்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சென்று மத்திய நீர் வளத்துறை அமைச்சரைச் சந்திக்க காவிரி குறித்த பிரச்சினையை முறையிட உள்ளோம். மேலும், அவரிடம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை பெற்றுத் தர வலியுறுத்துவோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: “காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்கும்” - தம்பிதுரை தகவல்!

Last Updated :Sep 17, 2023, 10:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.