ETV Bharat / state

பொங்கல் சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து புறப்படும்? - முழு விவரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 6:23 PM IST

பொங்கல் சிறப்பு பேருந்துகளின் விவரம்
பொங்கல் சிறப்பு பேருந்துகளின் விவரம்

Pongal Special Bus: பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் ஏற்பாடுகள்குறித்த ஆலோசனைக் கூட்டமானது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று(ஜன.8) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி, போக்குவரத்துத் துறை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது, "பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 12/01/2024 முதல் 14/01/2024 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 706 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11 ஆயிரத்து 6 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8 ஆயிரத்து 478 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னை திரும்புவதற்கு 16/01/2024 முதல் 18/01/2024 வரையில் தினசரி இயக்கக் கூடிய 2ஆயிரத்து 100 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 830 சிறப்புப் பேருந்துகளும் மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 11ஆயிரத்து 130 பேருந்துகள் என ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6ஆயிரத்து 459 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 17ஆயிரத்து 589 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

பொங்கல் திருநாள் - சிறப்பு பேருந்துகள் இயக்கம்: சென்னையிலிருந்து பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்(12/01/2024 முதல் 14/01/2024 வரை)

வ. எண் பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்
1மாதவரம் புதிய பேருந்து நிலையம்பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள்
2கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையம்கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள்
3. (அ). தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து TNSTC வழித்தட பேருந்துகள் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீங்கலாக)
(ஆ). வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்
4பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம் (பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்)பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்
5புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு
  • மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
  • திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, செயங்கொண்டம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துத் கழகத்தை சார்ந்த பேருந்துகள்.
  • பெங்களுர் மற்றும் ECR மார்க்கமாக இயக்கப்படும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள்.

(இதர ஊர்களுக்குச் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி கோட்டத்தைச் சார்ந்த பேருந்துகள் கீழ்கண்ட தட பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்).

6

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்

(தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாகச் செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தடங்கள்)

திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த மற்றும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

2024-பொங்கலுக்கு முன்பு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை:(12/01/2024 முதல் 14/01/2024 வரை):

நாள் தினசரி இயக்கப்படும் நிர்ணயப் பேருந்துகள் சிறப்புப் பேருந்து இயக்கம்
சென்னையில் இருந்து சிறப்பு இயக்கம்பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து

12.01.2024

(வெள்ளி)

2,100 901 1,986

13.01.2024

(சனி)

2,100 1901 3,131

14.01.2024

(ஞாயிறு)

2,100 1904 3,361
உள் மொத்தம் 6,300 4,706 8,478
மொத்தம் 6,300 சிறப்பு பேருந்துகள் மொத்தம் 13,184
ஆகமொத்தம் 19,484 பேருந்துகள் இயக்கப்படுகின்றன

தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் புறப்பாடு விவரம்: 30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களும் பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி மார்க்கமாக பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வழித்தட மாற்றம்(கார் மற்றும் இதர வாகனங்கள்): கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம், பெருங்களத்தூர் வழியாகச் செல்வதை தவிர்த்து (OMR) திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு மையங்கள் செயல்படும் இடங்கள்: (12/01/2024 முதல் 14/01/2024 வரை)

(காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை):

வ.எண் பேருந்து நிலையங்கள்முன்பதிவு மையங்கள்
1 கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் 05
2கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் 05
3 MEPZ (தாம்பரம் சானிடோரியம்) 01
மொத்தம் 11

முன்பதிவு வசதி: முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc official app மற்றும் www.tnstc.in போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு பின்பு, நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை:

(16.01.2024 முதல் 18.01.2024 வரை)

நாள் தினசரி இயக்கப்படும் நிர்ணயப் பேருந்துகள் சிறப்புப் பேருந்து இயக்கம்
பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்குசென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு

12.01.2024

(வெள்ளி)

2,100 2,028 2,164

13.01.2024

(சனி)

2,100 1,726 2,632

14.01.2024

(ஞாயிறு)

2,100 1,076 1,663
உள் மொத்தம் 6,300 4,830 6,459
மொத்தம் 6,300 சிறப்பு பேருந்துகள் மொத்தம் 11,289
ஆகமொத்தம் 17,589 பேருந்துகள் இயக்கப்படுகின்றன

பயணிகளின் வசதிக்காக 24x7 கட்டுப்பாட்டு அறை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24x7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  • மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 (Toll Free Number) மற்றும் 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  • இதுமட்டுமின்றி, பயணிகளின் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.
  • மேலும், பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு வசதியினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்: பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 5 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்" என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: திட்டமிட்டபடி நாளை முதல் ஸ்டிரைக் அறிவித்த தொழிற்சங்கங்கள்.. அமைச்சர் சிவசங்கர் ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.