தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அலுவலர்கள் டிஜிபியாக பதவி உயர்வு!

author img

By

Published : Sep 25, 2021, 9:22 AM IST

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/24-September-2021/13163916_ips1.jpg

தமிழ்நாட்டில் ஐந்து ஐபிஎஸ் அலுவலர்களுக்கு, காவல்துறை தலைவர்களாக பதவி உயர்வு அளித்து உள்துறைச் செயலாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள காவல் துறை தலைவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிவரும் ஐபிஎஸ் அலுவலர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 1990 ஆம் ஆண்டு பிரிவில் தேர்வாகி, தமிழ்நாட்டில் பணியாற்றும் 5 ஐபிஎஸ் அலுவலர்களை காவல்துறை தலைவர்களாக பதவி உயர்த்தி, உள்துறைச் செயலாளர் பிரபாகரன் இன்று (செப்.20) உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே 7 காவல்துறை தலைவர்கள் உள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள பதவி உயர்வு அறிவிப்பால் இந்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

உள்துறை செயலாளர் வெளியிட்ட பதவி உயர்வு அறிவிப்பாணை
உள்துறை செயலாளர் வெளியிட்ட பதவி உயர்வு அறிவிப்பாணை

அதன்படி பதவி உயர்வு அளிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர்களின் பெயர் விவரங்கள் பின்வருமாறு:

1. சங்கர் ஜிவால்

2. ஏ.கே விஸ்வநாதன்

3. ஆபாஷ்குமார்

4. டி.வி ரவிச்சந்திரன்

5. சீமா அகர்வால்

செப்டம்பர் 22ஆம் தேதி பதவி உயர்வு அளிப்பதற்கான சிறப்பு ஆலோசனைக்குழு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னரே ஏப்ரல் 9 ஆம் தேதி பதவி உயர்வு குறித்து மத்திய உள்துறையிடம், தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவி உயர்வால், முக்கிய காவல்துறை உயர் அலுவலர்களின் பணியிடங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நல்ல செய்தி - பெண் காவலர்களின் பணிநேரம் 8 மணிநேரமாக குறைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.