ETV Bharat / state

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு, காரைக்காலை சேர்ந்த 23 மீனவர்கள் விடுவிப்பு

author img

By

Published : Jul 22, 2022, 4:21 PM IST

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு , காரைக்காலை சோ்ந்த 23 மீனவா்கள் மீட்பு
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு , காரைக்காலை சோ்ந்த 23 மீனவா்கள் மீட்பு

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு, காரைக்காலைச் சோ்ந்த 23 மீனவா்கள், இலங்கை சிறையிலிருந்து அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு, விமானத்தில் சென்னை திரும்பினா்.

சென்னை: தமிழ்நாட்டைச் சோ்ந்த மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இம்மாதம் 3 ஆம் தேதி அதிகாலையில், இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினா், தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனா்.

அதன்பின்பு இலங்கைக்கு கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆதியார் படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர் சங்கங்கள் தமிழ்நாடு அரசுக்கு, கைதான மீனவா்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதங்கள் எழுதி மீனவா்களை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அலுவலர்கள் இலங்கை அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், இம்மாதம் 8 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் மீனவா்களை விடுவித்தது. அதோடு இந்திய தூதரகத்திடம், மீனவா்கள் ஒப்படைக்கப்பட்டனர். மீனவா்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனா். அதன் பின்பு 23 மீனவர்களுக்கும் இந்திய தூதரக அலுவலர்கள் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர்.

அதன்பின்பு இன்று இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 23 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் இவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அலுவலர்கள் வரவேற்றனர். அதோடு அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான வாகன வசதிகளும், தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். அந்த வாகனங்களில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஸ்ரீமதி உடலைப்பெற ஒப்புக்கொண்ட பெற்றோர் - நாளை மாலைக்குள் இறுதிச்சடங்கை முடிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.