ETV Bharat / state

மன்னிப்பு கேட்டாலும் ஓ.பி.எஸ்.ஐ ஏற்க முடியாது - எடப்பாடி ஆவேசம்

author img

By

Published : Sep 8, 2022, 4:17 PM IST

o pannerselvam  edappadi palani samy  edappadi palani samy slams o pannerselvam  eps ops  cm stalin  admk office  ஓபிஎஸ்  ஈபிஎஸ்  எடப்பாடி பழனிசாமி  ஓ பன்னீர்செல்வம்  முதலமைச்சர் ஸ்டாலின்  அதிமுக அலுவலகம்
ஈபிஎஸ்

பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் ஓ பன்னீர்செல்வம் எனவும், மனிப்பு கேட்டாலும் அவரை ஏற்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்று (செப் 8) பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்ட நிலையில், வழிநெடுங்கிலும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்று 11.30 மணியளவில் அதிமுக அலுவலகம் வந்தடைந்தார்.

தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், “இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தொண்டர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் கழக ஆட்சி அமைப்போம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிமுக அலுவலகம் எங்கள் தரப்புக்கு தரப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் தேதி தலைமை அலுவலகத்தில் புகுந்து பத்திரங்களை திருடி சென்றுள்ளனர். பிரதான எதிர்க்கட்சி புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிமுகவில் பிளவு என்பது கிடையாது. ஒரு சிலர் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கட்சியின் உயர்ந்த பதவியில் இருந்தவர் கொள்ளை கூட்டத்திற்கு தலைமை தாங்குவது போல ஓ பன்னீர்செல்வம் வந்தார். கட்சி அலுவலக கதவை எட்டி உதைத்தவர்களை தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள். மன்னிப்பு கேட்டாலும் ஓ பன்னீர்செல்வத்தை ஏற்க முடியாது.

ஈபிஎஸ் செய்தியாளர்கள் சந்திப்பு

பச்சோந்தியை விட அதிகமாக நிறம் மாறுபவர் ஓ பன்னீர்செல்வம். கட்சிக்கும் விசுவாசம் கிடையாது, ஜெயலலிதாவிற்கும் விசுவாசம் கிடையாது என இருபவர் அவர். ஒரு அதிமுக எம்எல்ஏவை கூட திமுகவால் அசைக்க முடியவில்லை. அதிமுகவை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆர்.எஸ்.பாரதியை தேர்தலில் நிக்க சொல்லுங்கள் பார்க்கலாம், திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாத போது ஒரு பேச்சு. ரவுடிகளையும் குண்டர்களையும் வைத்து கட்சி நடத்துவது திமுக. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டது, நீட் தேர்விற்கு விலக்கு எங்கே.

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுப்பது என்றால் தி.மு.கவுக்குதான் தரவேண்டும். நீட் தேர்வால் ஏற்படும் தற்கொலைகளுக்கு தி.மு.க வே பொறுப்பேற்க வேண்டும். ஆட்சிக்கு வந்தால் ஒரே கை எழுத்தால் நீட்டை ஒழிப்போம் என்றார்கள், செய்தார்களா.

தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது. சூதாட்டத்திற்கு யாரவது கருத்து கேட்பு கூட்டம் நடத்துவர்களா. எது நல்லது, எது கெட்டது என்று தெரியாத ஒரு நபர் இன்று முதலமைச்சராக இருக்கிறார்” என குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: திமுகவை கம்யூனிஸ்டுகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் - அர்ஜுன் சம்பத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.