கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி?

author img

By

Published : Aug 4, 2022, 12:38 PM IST

தன்பாலின ஈர்ப்பாளர்கள் என கூறியதால் மருத்துவக்கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சியா?

சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், நடத்தையில் குறைவாக பேசியதால் இரண்டு கால் நடை மருத்துக்கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை: மதுரையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஆகிய இருவரும் சென்னை பெரியமேட்டில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு கால்நடை மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இவ்விரு மாணவிகளும் தோழிகளாக இருந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் வெளியே சென்றுவிட்டு விடுதிக்கு தாமதமாக வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்பதால், இவர்கள் இருவரின் நடத்தையையும் குறைவாகப் பேசி சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை தவிர்
தற்கொலை தவிர்

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவிகளில் ஒருவர், நேற்று மதியம் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆய்வுக்கூடத்தில் இருந்து மெர்குரிக் சல்பைடை எடுத்து வந்து, உணவு உட்கொள்ளும்போது அருந்திய நிலையில், மற்றொரு மாணவியும் அதை வாங்கி அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதைக்கண்ட சக மாணவி ஒருவர், இருவரையும் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளதாக தெரிகிறது. மாணவிகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேப்பேரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணைத்தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.