ETV Bharat / state

புனேவில் இருந்து சென்னை வந்த 3,76,000 கோவிஷீல்டு தடுப்பூசி

author img

By

Published : Jun 17, 2021, 7:46 PM IST

கோவீஷீல்ட் தடுப்பூசி
கோவீஷீல்ட் தடுப்பூசி

சென்னை: புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில். பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மக்களுக்கு போட தடுப்பூசிகள் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டன. இதனால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 9 பார்சல்களில் மாநில அரசு கொள்முதல் செய்த ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இது தேனாம்பேட்டை மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதேபோல் மத்திய தொகுப்பில் இருந்து 23 பார்சல்களில் சுமார் 2 லட்சத்து 76 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன. இதனை சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

அதேபோல் இன்று காலை 60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தன. இன்று ஒரேநாளில் 4 லட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜூலையில் குழந்தைகள் தடுப்பூசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.