ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 37 பேருக்கு கரோனா

author img

By

Published : Mar 25, 2022, 10:07 PM IST

தமிழகத்தில் மேலும் 446 பேருக்கு கரோனா சிகிச்சை
தமிழகத்தில் மேலும் 446 பேருக்கு கரோனா சிகிச்சை

பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் மார்ச் 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 37 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: பொதுசுகாதாரத்துறை இயக்குநரகம் மார்ச் 25ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 32 ஆயிரத்து 237 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இருந்த 37 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர் என்பது தெரிய வந்தது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 829 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

மேலும் 446 பேருக்கு சிகிச்சை: இதனால் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 52 ஆயிரத்து 612 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 446 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 66 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 141 என உயர்ந்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் புதிதாக யாரும் இறக்கவில்லை. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25ஆக உள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக சென்னையில் 11 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 5 நபர்களுக்கும் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளியில் மூன்று நபர்களுக்கும் என 16 மாவட்டங்களில் 37 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 22 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. மேலும், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் ஒருவரும் சிகிச்சையில் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:577 மீனவர்கள் பாகிஸ்தானின் பிடியில் இருப்பதாக மக்களவையில் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.