ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 29 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 10:01 PM IST

29 people affected Corona
29 பேருக்கு கரோனா பாதிப்பு

TN Corona cases: தமிழ்நாட்டில் இன்று 29 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உருமாற்றம் அடைந்த ஜெஎன் 1 கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்த கரோனா தொற்று பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு, தற்பொழுது இரட்டை இலக்கத்திற்கு மாறி வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின்போது தொண்டை வலி, அதிக காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

அவ்வாறு இருந்தால், அவர்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். மேலும் சளி, இருமல் இருப்பவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று வரக்கூடாது என்பதற்காக தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுடன், முககவசம் அணிந்து செல்வதும் நல்லது என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

மேலும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் இணை நோய் இருந்தால், கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் இன்று (ஜன.3) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் கரோனா புதியதாக 317 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம், 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் இதுவரையில் 7 கோடியே 10 லட்சத்து 5 ஆயிரத்து‌ 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜன.9 முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.