தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு

author img

By

Published : Aug 5, 2021, 8:46 PM IST

கரோனா பாதிப்பு அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை: மக்கள் நல்வாழ்வு துறை இன்று (ஆக. 5) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவல், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 149 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,995 நபர்களுக்கும், மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாடு வந்த இரண்டு நபர்களுக்கும் என மொத்தம் 1,997 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 73 லட்சத்து 34 ஆயிரத்து 452 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 25 லட்சத்து 69 ஆயிரத்து 398 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 20 ஆயிரத்து 138 பேர் உள்ளனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 1,943 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 15 ஆயிரத்து 30 என உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 28 நோயாளிகளும் என 33 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 230 என உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் புதிதாக 220 நபர்களுக்கும்,சென்னையில் 196 நபர்களுக்கும், ஈரோட்டில் 161 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 130 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 119 நபர்களுக்கும், திருவள்ளூரில் 106 நபர்களுக்கும், திருப்பூரில் 97 நபர்களுக்கும் என அதிக அளவில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,39,105

கோயம்புத்தூர் - 2,30,463

செங்கல்பட்டு - 1,62,584

திருவள்ளூர் - 1,13,910

சேலம் - 93,804

திருப்பூர் - 88,261

ஈரோடு - 94,521

மதுரை - 73,615

காஞ்சிபுரம் - 71,919

திருச்சிராப்பள்ளி - 72,795

தஞ்சாவூர் - 68,434

கன்னியாகுமரி - 60,243

கடலூர் - 60,787

தூத்துக்குடி - 55,178

திருநெல்வேலி - 47,995

திருவண்ணாமலை - 52,278

வேலூர் - 48,176

விருதுநகர் - 45,565

தேனி - 42,981

விழுப்புரம் - 44,005

நாமக்கல் - 47,469

ராணிப்பேட்டை - 42,051

கிருஷ்ணகிரி - 41,497

திருவாரூர் - 38,046

திண்டுக்கல் - 32,261

புதுக்கோட்டை - 28,292

திருப்பத்தூர் - 28,342

தென்காசி - 26,893

நீலகிரி - 30,755

கள்ளக்குறிச்சி - 29,287

தருமபுரி - 26,242

கரூர் - 22,730

மயிலாடுதுறை - 21,171

ராமநாதபுரம் - 20,084

நாகப்பட்டினம் - 18,828

சிவகங்கை - 18,902

அரியலூர் - 15,877

பெரம்பலூர் - 11,526

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,018

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,080

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: கரோனா காலத்தில் பணியாற்றாத ஆசிரியர்களுக்கு விருது இல்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.