சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டபோதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்தாலும் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
கரோனா பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. சென்னையில் தினமும் ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று (அக் 19) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அதேபோல் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கையும் ஏழு விழுக்காட்டிலிருந்து ஆறு விழுக்காடாக குறைந்துள்ளது.
சென்னைையில் மொத்தம் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 949 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 128 பேர் குணடைந்துள்ளனர். அதாவது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து, 285 பேராக உள்ளது. வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 536 பேராக உள்ளது.
மண்டல வாரியான சிகிச்சைபெற்றுவருபவர்களின் பட்டியல்,
கோடம்பாக்கம் - 1037 பேர்
அண்ணா நகர் - 1141 பேர்
ராயபுரம் - 673 பேர்
தேனாம்பேட்டை - 889 பேர்
தண்டையார்பேட்டை - 623 பேர்
திரு.வி.க. நகர் - 889 பேர்
அடையாறு - 827 பேர்
வளசரவாக்கம் - 717 பேர்
அம்பத்தூர் - 780 பேர்
திருவொற்றியூர் - 328 பேர்
மாதவரம் - 383 பேர்
ஆலந்தூர் - 622 பேர்.
சோழிங்கநல்லூர் - 243 பேர்
பெருங்குடி - 418 பேர்
மணலி - 165 பேர்