ETV Bharat / state

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு! முக கவசம் அணியுங்கள் மக்களே...

author img

By

Published : Jun 13, 2022, 7:35 AM IST

corona count
கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கரோனா பரவல் சற்றே அதிகரித்து வருவதால் மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 249 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,065 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இந்த பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

சென்னையில் 124 பேருக்கும் , செங்கல்பட்டில் 40 பேருக்கும் , கோவையில் 20 பேருக்கும் , காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும் , திருவள்ளூரில் 11 பேருக்கும் , குமரியில் 7 பேருக்கும் , சிவகங்கையில் 5 பேருக்கும் , கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மதுரையில் 4 பேருக்கும் , சேலம் மற்றும் நெல்லையில் தலா 3 பேருக்கும் , திருச்சி , வேலூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் , தஞ்சை , தூத்துக்குடி , அரியலூர் , கடலூர் , திண்டுக்கல் , கரூர் , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் , விமானம் வழியாக வந்தவர்களில் 7 பேருக்கும் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.