ETV Bharat / state

'இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள்' - முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

author img

By

Published : May 3, 2022, 4:45 PM IST

வேண்டுகோள்
வேண்டுகோள்

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்கிடுங்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று (மே 3) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்தச் சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வழங்கிடும் உதவிகள் இலங்கை மக்களுக்குத்தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி குறிப்பு
செய்திக் குறிப்பு

நன்கொடை வழங்க விரும்புவோர் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் வழங்கலாம்.

மின்னணு பரிவர்த்தனை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்

1. மின்னணு பரிவர்த்தனை: https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

வங்கிக் கிளை : தலைமைச் செயலக கிளை,

சென்னை – 600 009

சேமிப்பு வங்கி கணக்கு எண்: 117201000000070

IFSC குறியீடு : IOBA0001172

CMPRF பான் எண் : AAAGC0038F

SWIFT குறியீடு : IOBAINBB001

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை (வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு).

2. ECS மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்பும் பங்களிப்பாளர்கள், அவர்கள் வருமான வரி விலக்கு பெறுவதற்கும் அதிகாரப்பூர்வ ரசீதை அனுப்புவதற்கும் பின்வரும் விவரங்களை வழங்கவும்.

பங்களிப்பாளரின் பெயர்:
பங்களிப்புத் தொகை:
வங்கி மற்றும் கிளை:
பணம் அனுப்பும் தேதி:
பரிவர்த்தனை குறிப்பு எண்:
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மின்னஞ்சல் முகவரி:
தொலைபேசி எண் / கைபேசி எண்:

3. UPI-VPA id : tncmprf@iob மற்றும் PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik etc. போன்ற பல்வேறு மொபைல் செயலிகள்.

செய்தி குறிப்பு
செய்திக் குறிப்பு
காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர்

The Joint Secretary to Government & Treasurer,
Chief Minister’s Public Relief Fund,
Finance (CMPRF) Department,
Secretariat, Chennai 600 009,
Tamil Nadu, India.

அரசு இணைச் செயலாளர் & பொருளாளர்,
முதலமைச்சரின் பொது நிவாரண நிதி,
நிதி(மு.பொ.நி.நி) துறை,
தலைமைச் செயலகம், சென்னை 600 009,
தமிழ்நாடு, இந்தியா’ என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பிவைக்கலாம்.

அனுப்பி வைக்கப்பட வேண்டிய இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்களிடமும் வழங்கலாம். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-Gஇன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்’ என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை பிரச்சனை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.