வடகிழக்கு பருவமழை தொடக்கம்: மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

author img

By

Published : Oct 26, 2021, 8:25 AM IST

Updated : Oct 26, 2021, 9:09 AM IST

மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை, ஸ்டாலின் ஆலோசனை,

வடகிழக்கு பருவமழை இன்று (அக்.26) தொடங்கயுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (அக்.26) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (அக்.26) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னையில் மண்டலம் வாரியாக ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

அதே போல் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்து மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இக்கூட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகள் மக்களை முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்துவது, மின்சாரம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது, அணைகளின் நீர்மட்டம் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகள் குறித்துவிவாதிக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் குடும்பக் கட்டுப்பாடு வயது வரம்பு உயர்வு!

Last Updated :Oct 26, 2021, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.