ETV Bharat / state

'மூன்று வேளாண் சட்டங்களைகத் திரும்ப பெற வேண்டும்' மு.க ஸ்டாலின் வலியுறுத்தல்!

author img

By

Published : May 26, 2021, 11:42 AM IST

mk
மு.க ஸ்டாலின்

சென்னை: மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மக்களவை நடைமுறைகளைப் புறக்கணித்து, அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் தொடங்கி, இன்றுடன் (மே 26) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, உணர்வுகளை மதித்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு இதுவரை முன்வரவும் இல்லை, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிக்கிறது.

2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், ‛இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தீர்மானம் நிறைவேற்றி, இவற்றை ரத்து செய்திட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்' என, தமிழ்நாடு மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எனவே 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.